No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

2022  ஆம் ஆண்டிற்கான திருத்தந்தையின் மறைபரப்புக் கருத்து

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள உலக மறைபரப்புத்  தினத்திற்கென, ஜனவரி 6  ஆம் தேதி, வியாழன் திருக்காட்சித் திருவிழாவன்று செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கிறிஸ்துவின் மீட்பு தரும் நற்செய்தியை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வு நடவடிக்கை வழி எடுத்துரைக்க வேண்டும் என அதில் அழைப்பு விடுத்துள்ளார்.
இயேசுவின் ஒவ்வொரு சீடரின் வாழ்வு மற்றும் மறைப்பணியின் மூன்று அடித்தளங்கள் குறித்து அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, முதல் படியாக, கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதை விவரித்துள்ளார்.
இறைத்தந்தையின் முதல் மறைப்பணியாளராக அனுப்பப்பட்ட இயேசுவை பின்பற்றி, நாமும் நமது தினசரி வாழ்வு நடவடிக்கைளில் சான்று பகர்பவர்களாகச் செயல்படுவோம் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.  நம் மறைப்பணி என்பது ஒன்றிணைந்து சான்று பகர்வதாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் இறுதி எல்லைவரைக்கும் சென்று மறைப்பணியாற்றுவதை இரண்டாவது அடிப்டையாகக் காட்டியுள்ளார்.
சீடரின் வாழ்வு மற்றும் மறைப்பணியின் மூன்றாவது அடித்தளமாக, தூய ஆவியாரிடமிருந்து பெறும் வல்லமையை, உலக மறைபரப்புக்கான செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்தியம்பியுள்ளார்.
 

Comment